குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகும் அவலம்


குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகும் அவலம்
x
தினத்தந்தி 24 Oct 2023 6:45 PM GMT (Updated: 24 Oct 2023 6:45 PM GMT)

வாய்மேட்டில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. உடைப்பை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேட்டில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. உடைப்பை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

தண்ணீர் குழாயில் உடைப்பு

வாய்மேடு கடைத்தெருவில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் செல்கிறது. துளசியாப்பட்டினம் நீரேற்று நிலையத்தில் இருந்து அண்ணாபேட்டை, வாய்மேடு வழியாக தகட்டூர், மருதூர், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம் வழியாக வேதாரண்யம் வரை கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீர்குழாய் செல்கிறது.

இந்த பிரதான குழாயில் வாய்மேடு கடைத்தெரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. இந்த பகுதியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தற்போது 3 நாட்களுக்கு ஒரு முறை தான் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது.

வீணாகும் அவலம்

இந்த நிலையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இந்த குழாயில் இதே இடத்தில் பலமுறை உடைப்பு ஏற்பட்டு அதிகாரிகள் சரி செய்தனர். ஆனால் குறுகிய காலத்திலேயே மீண்டும் அதே இடத்தில் உடைப்பு ஏற்படுகிறது.

மேலும் தண்ணீர் தட்டுப்பாடு இப்பகுதியில் நிலவி வருகிறது. எனவே இந்த உடைப்பை நிரந்தரமாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story