வீடு புகுந்து 12 பவுன் தங்க காசு, நகை திருட்டு 2 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை-ராசிபுரம் கோர்ட்டு தீர்ப்பு


வீடு புகுந்து 12 பவுன் தங்க காசு, நகை திருட்டு 2 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை-ராசிபுரம் கோர்ட்டு தீர்ப்பு
x

வீடு புகுந்து 12 பவுன் தங்க காசு, நகை திருடிய 2 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராசிபுரம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

நாமக்கல்

ராசிபுரம்:

12 பவுன் தங்க காசு, நகை திருட்டு

ராசிபுரம் கோனேரிப்பட்டி திருப்பதி நகரை சேர்ந்தவர் செந்தமிழரசு. இவருடைய மனைவி சுகன்யா (வயது 26). இவர்களது வீட்டில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 பவுன் தங்க காசு, நகைகள் திருட்டு போனது. இதுகுறித்து சுகன்யா ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் வீடு புகுந்து தங்க காசு, நகைகளை திருடிய மதுரை ஆனையூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சிவராஜன் என்கிற மணிகண்டன் (44) மற்றும் கோவை ராஜி நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் என்கிற ஸ்டீபன் (38) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

6 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு விசாரணை ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை அனைத்தும் முடிவடைந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன், சதீசுக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு ரெகனா பேகம் தீர்ப்பளித்தார்.


Next Story