ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் விவசாயி சாவு


ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் விவசாயி சாவு
x

ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் விவசாயி உயிரிழந்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே நல்லணம் காலனி தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் ரவிச்சந்திரன்(வயது 57). விவசாயி. இவர் கடந்த 26-ந் தேதி நடுவலூர் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டை பார்க்க சென்றிருந்தார். அப்போது வாடி வாசல் வழியாக வந்த காளை ரவிச்சந்திரனை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story