ஜல்லிக்கட்டு வழக்கு : பீட்டாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி


ஜல்லிக்கட்டு வழக்கு : பீட்டாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி
x
தினத்தந்தி 7 Dec 2022 11:26 AM GMT (Updated: 7 Dec 2022 11:29 AM GMT)

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

புதுடெல்லி,

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது விசாரணையின் போது ,

ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின் பகுதியாகும்; ஒரு குறிப்பிட்ட நடைமுறை அவசியமானதா இல்லையா என்று நீதிமன்றம் எவ்வாறு தீர்மானிக்க முடியும்?" என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு தரப்பு வாதிட்டது.

மேலும் விளையாட்டிற்கு முன்பு ஐல்லிக்கட்டு காளைகள் மருத்துவர்களால் முழுமையாக பரிசோதனை செய்யப்படுகின்றன; கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, பல சிறந்த நடைமுறைகளும் பின்பற்றப்பட்ட பிறகே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என தமிழ்நாடு அரசு தரப்பு வாதிட்டது.

அப்போது ஐல்லிக்கட்டிற்கு முன்பு கால்நடை மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படும் காளைகள், ஐல்லிக்கட்டிற்கு பிறகு பரிசோதனை செய்யப்படுகிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பின்பும் காளைகளை பரிசோதிக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

மேலும் ஜல்லிக்கட்டு புகைப்படங்களை உங்களுக்கு எடுத்துக் கொடுத்தது யார்? விதிமுறைகள் மீறல் தொடர்பாக எங்கேனும் புகார் அளித்தீர்களா? புகைப்படங்களின் அடிப்படையில் மட்டும் முடிவுக்கு வர முடியுமா? என பீட்டாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


Next Story