ஜல்லிக்கட்டு வீரர் கொலையில்கள்ளக்காதலி உள்பட 4 பேர் கைது


ஜல்லிக்கட்டு வீரர் கொலையில்கள்ளக்காதலி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 11 Feb 2023 7:00 PM GMT (Updated: 11 Feb 2023 7:00 PM GMT)

குஜிலியம்பாறை அருகே ஜல்லிக்கட்டு வீரர் கொலை வழக்கில் கள்ளக்காதலி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

ஜல்லிக்கட்டு வீரர் கொலை

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தில் கொல்லப்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி குட்டை ஒன்று உள்ளது. இந்த குட்டையில் கடந்த 9-ந்தேதி இரவு ஆண் பிணம் ஒன்று மிதந்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர், குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குட்டையில் மிதந்தவரின் உடலை நேற்று முன்தினம் மீட்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர், திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்த மணி (வயது 23) என்றும், அவர் ஜல்லிக்கட்டு வீரர் என்பதும் தெரியவந்தது. அவரை கை, கால் மற்றும் வாயை கட்டி கொடூரமாக கொலை செய்து உடலில் கல்லை கட்டி குட்ைடயில் வீசி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

4 பேர் கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜல்லிக்கட்டில் மாடு பிடிப்பதில் மோதலா? அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் மணி கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு வீரர் மணியை கொலை செய்தது தொடர்பாக கருங்குளத்தை சேர்ந்த ஒரு பெண் மற்றும் கரூரை சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் மணியை ெகாலை செய்தது தொடர்பாக பாலசுப்பிரமணி (47), அவரது மகன் பரத்ராஜ் (19), சுரேஷ் (42) மற்றும் கருங்குளத்ைத சேர்ந்த மூக்காயி (33) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். அந்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

கள்ளத்தொடர்பு

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மனைவி மூக்காயி. பாலசுப்பிரமணி குடும்பத்துடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக கரூருக்கு சென்றார். அப்போது கரூரில் வசித்து வரும் மற்றொரு பாலசுப்பிரமணியுடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் பாலசுப்பிரமணியிடம் கடனாக மற்றொரு பாலசுப்பிரமணி பணம் கொடுத்தார். அந்த பணத்தை வசூல் செய்வதற்காக அவர், பாலசுப்பிரமணி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது மூக்காயிக்கும், மற்றொரு பாலசுப்பிரமணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

தீர்த்து கட்ட முடிவு

இதையறிந்த பாலசுப்பிரமணி தனது மனைவியை கண்டித்துள்ளார். பின்னர் அவர்கள் கருங்குளத்துக்கு குடியேறினர். இதனால் அவர்களிடம் இருந்து பணம் வசூல் செய்ய கருங்குளத்தில் உள்ள ஜல்லிக்கட்டு வீரர் மணியிடம், மற்றொரு பாலசுப்பிரமணி கூறினார்.

அதன்படி மூக்காயி வீட்டுக்கு சென்று மணி பணத்தை வசூல் செய்துள்ளார். இதில் மூக்காயியுடன் மணிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது மற்றொரு பாலசுப்பிரமணிக்கு தெரியவந்தது. இதனால் மணியை தீர்த்து கட்ட அவர் முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து கரூரில் மணிக்கு வேலை வாங்கி தருவதாக பாலசுப்பிரமணி கூறினார். இதை நம்பி கடந்த 4-ந்தேதி மணி கரூர் சென்றார்.

சரமாரி தாக்குதல்

அங்கிருந்து பாலசுப்பிரமணி, அவரது மகன் பரத்ராஜ், உறவினர் சுரேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து மணியை ஒரு வேனில் குஜிலியம்பாறை அருகே கோட்டாநத்தத்தில் உள்ள கொடியரசு என்பவரின் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவரை சரமாரியாக தாக்கினர். இதில் மயங்கிய மணியை ஒரு சாக்குமூட்டையில் கட்டினர். பின்னர் அவரை ஒரு வேனில் வைத்து குஜிலியம்பாறை அடுத்த கொல்லப்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரி குட்டைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மணியின் கை, கால்கள் மற்றும் வாயை கட்டி, கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் உடலில் கல்லை கட்டி குட்டையில் தூக்கி வீசி சென்றுள்ளனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவத்தில் தலைமறைவான கொடியரசை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கொலை சம்பவத்தில் ஒரே நாளில் குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பாராட்டினார்.


Next Story