ஜெயலலிதாவின் சொத்துக்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் - பெங்களூரு நகர சிவில் நீதிமன்றம் உத்தரவு


ஜெயலலிதாவின் சொத்துக்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் - பெங்களூரு நகர சிவில் நீதிமன்றம் உத்தரவு
x

ஜெயலலிதாவின் சொத்துக்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு பெங்களூரு நகர சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞரை நியமித்து ஏலம் விட நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக அரசுக்கு, பெங்களூரு நகர சிவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெயலலிதாவின் சொத்துக்களில் புடவைகள், காலனி, சால்வைகள் ஆகியவற்றை ஏலம் விடும் கோரி வழக்கறிஞர் நரசிம்மமூர்த்தி தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




Next Story