தொழிலாளி வீட்டில் நகை-பணம் திருட்டு

திருவெண்ணெய்நல்லூர் அருகே தொழிலாளி வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.கொணலவாடி கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 60).தொழிலாளி. இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். இதைநோட்ட மிட்ட மர்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள், அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.12 ஆயிரம் மற்றும் 2 பவுன் நகையை திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசாரூதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





