மூதாட்டியிடம் நூதன முறையில் நகை மோசடி


மூதாட்டியிடம் நூதன முறையில் நகை மோசடி
x

மூதாட்டியிடம் நூதன முறையில் நகை மோசடி செய்யப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் வீராசாமி தெருவை சேர்ந்தவர் லட்சுமி (வயது 82). தனியாக வசித்து வரும் இவரிடம் 55 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தாமிரபரணி குடிநீர் குழாய் இணைப்பு வழங்க குழி தோண்ட வேண்டும் என்றும், தங்கள் மகன் பாலு தங்களிடம் ரூபாய் வாங்கிக் கொள்ளச் சொன்னார் என்றும் தெரிவித்தார். உடனே லட்சுமி ரூ.50 கொடுத்தவுடன் இந்த பணம் போதாது வீட்டில் பீரோவில் இருந்து பணம் எடுத்து வாருங்கள் என்று அந்த நபர் சொன்னவுடன் பீரோவில் பணம் இல்லை என்று லட்சுமி தெரிவித்தார். இந்நிலையில் அந்த நபர், லட்சுமி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை கழற்றிக் கொண்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றிய புகாரின் பேரில் இந்நகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story