பெண்ணிடம் நகை பறிப்பு
மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் பெண்ணிடம் நகை பறித்துவிட்டு தப்பி சென்றனர்
சிவகங்கை
சிவகங்கையை அடுத்த வண்டவாசியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 50). இவரது கணவர் கண்ணன் தேனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாரிமுத்து பள்ளி வேனில் வரும், தன்னுடைய பேர குழந்தைகளை அழைத்து வருவதற்காக வீட்டில் இருந்து மெயின் ரோட்டிற்கு வந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மாரிமுத்து அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இதுதொடர்பாக சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்களை தேடி வருகின்றனர்
Related Tags :
Next Story