நகை தொழிலாளி திடீர் சாவு


நகை தொழிலாளி திடீர் சாவு
x
தினத்தந்தி 13 Oct 2023 12:15 AM IST (Updated: 13 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நகை தொழிலாளி திடீர் இறந்தார்.

விழுப்புரம்

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் முகமதியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சரவணக்குமார் (வயது 23), நகை தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கீர்த்திகா என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்டு வீட்டில் படுத்து தூங்கிய சரவணக்குமார் நேற்று காலை அசைவற்று இருந்தார். கீர்த்திகா அவரை எழுப்பியபோது எழுந்திருக்கவில்லை. உடனே அவரை ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே சரவணக்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story