கும்மிடிப்பூண்டி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நகை, பணம் திருட்டு


கும்மிடிப்பூண்டி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நகை, பணம் திருட்டு
x

கும்மிடிப்பூண்டி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள தீனதாயாளன் நகரை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 55). ரியல் எஸ்டேட் அதிபர். இவர், கடந்த 18-ந்தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் நாகப்பட்டினம் சென்றார்.

நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அங்கு தனியறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.


Next Story