பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

பஸ்சில் சென்ற மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்டது.
ராமநாதபுரம்
கோவை சுண்டக்காமுத்தூரை சேர்ந்தவர் நடராஜ். இவருடைய மனைவி சீதாம்மாள் (வயது 82). இவர் தனியார் பஸ்சில் ராமநாதபுரம் வந்தார். அவர் அங்குள்ள சிக்னலில் இறங்கும்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை காணவில்லை.
அதை மர்ம ஆசாமிகள் பறித்துவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





