ரெயில்வே ஊழியர் வீட்டில் நகை திருட்டு


ரெயில்வே ஊழியர் வீட்டில் நகை திருட்டு
x
தினத்தந்தி 7 May 2023 7:00 PM GMT (Updated: 7 May 2023 7:00 PM GMT)

திண்டுக்கல்லில் ரெயில்வே ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள் நகைகளை திருடி சென்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 33). இவருடைய மனைவி காயத்ரி (30). இவர் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் எலட்க்ரிக்கல் பிரிவில் ஊழியராக உள்ளார். நேற்று முன்தினம் சரவணன், தனது குடும்பத்தினருடன் பழனிக்கு சென்றார். பின்னர் அதிகாலையில் சரவணன் மட்டும் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருப்பதை பார்த்து பதற்றமடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் திண்டுக்கல் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story