சிறுமியிடம் நகை பறிப்பு


சிறுமியிடம் நகை பறிப்பு
x

வாசுதேவநல்லூர் அருகே சிறுமியிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அருகே உள்ள திருமலாபுரம் என்ற அருளாட்சி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி கனகவல்லி (வயது 40). இவர் சிவகிரி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று இரவு இவர்களுடைய 14 வயது மகள் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடிக்கொண்டு வந்த மர்ம நபர் திடீரென்று சிறுமியின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வாசுதேவநல்லூர் போலீசில் கனகவல்லி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.


Next Story