இன்சூரன்ஸ் அதிகாரி வீட்டில் 40 பவுன் நகை திருட்டு


இன்சூரன்ஸ் அதிகாரி வீட்டில் 40 பவுன் நகை திருட்டு
x

சின்னாளப்பட்டி அருகே, ஓய்வு பெற்ற இன்சூரன்ஸ் அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

திண்டுக்கல்

இன்சூரன்ஸ் மேலாளர்

சின்னாளப்பட்டி அருகே உள்ள அம்பாத்துரை ஊராட்சிக்கு உட்பட்ட ராஜகாளியம்மன் நகரை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 60). இவர், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தற்போது அதே கம்பெனியில் ஆலோசகராக உள்ளார். இவருக்கு கோமதி (52) என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது. செல்லத்துரை மற்றும் அவரது மனைவி மட்டும் தனியாக வசித்து வந்தனர். மகள் லீலாவதி அதே பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி 3 மகன்களும் குடும்பத்துடன் அம்பாத்துரை வந்தனர். பின்னர் செல்லத்துரை தனது மனைவி, மகன்கள், மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு கேரள மாநிலம் கொச்சிக்கு சுற்றுலா சென்றார்.

40 பவுன் நகை திருட்டு

இன்று காலை செல்லத்துரை வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து செல்லத்துரைக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அவர், அதே பகுதியில் வசிக்கும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர்கள் சின்னாளப்பட்டி போலீசாரிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் செல்லத்துரையின் வீட்டுக்கு போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த பிரோக்களின் பூட்டை உடைத்து அதில் இருந்த 40 பவுன் நகைகள், ஒரு மடிக்கணினியை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. மேலும் வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன.

மோப்பநாய் சோதனை

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அது, வீட்டில் இருந்து பக்கத்து தெரு வழியாக ஓடி திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாைல வரை ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. ைகரேகை நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து சின்னாளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story