சிறுமியிடம் நகை திருட்டு


சிறுமியிடம் நகை திருட்டு
x

உவரியில் சிறுமியிடம் மர்மநபர் நகையை திருடிச் சென்றார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் தை தேரோட்ட திருவிழாவிற்கு ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்ததோப்பு ராஜா என்பவர் குடும்பத்துடன் வந்து இருந்தார். இரவு தூங்கிகொண்டு இருந்தபோது அவரது மகள் அருள் பிரியா (வயது 15) கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை யாரோ மர்ம நபர் திருடி சென்றுவிட்டதாக உவரி போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story