ஓசூரில்ஜம்போ சர்க்கஸ் தொடங்கியது


ஓசூரில்ஜம்போ சர்க்கஸ் தொடங்கியது
x
கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூரில் தளி சாலையில் வேளாங்கண்ணி பள்ளி அருகே ஜம்போ சர்க்கஸ் தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில் ஓசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டினார். மேலும் அவர் சர்க்கஸ் கலைஞர்களின் சாகச நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார். முன்னதாக ஜம்போ சர்க்கஸ் மேலாளர் பி.கே.ரித்தீஷ் வரவேற்றார். இதில் மாநகராட்சி கவுன்சிலர் வரலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சர்க்கசில் தினமும் மதியம் 2 மணி, மாலை 3 மணி, இரவு 7 மணி என 3 காட்சிகள் நடைபெறுவதாகவும், இதில் நாய்கள், குதிரைகள் மற்றும் எத்தியோப்பியா, ஆப்பிரிக்கன் கலைஞர்களின் சாகசங்கள் நடைபெறுவதாகவும் சர்க்கஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story