கபடி விளையாடியவர் திடீர் சாவு

காரைக்குடியில் கபடி விளையாடியவர் திடீரென இறந்தார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு போலீஸ் சரகம் செஞ்சை பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வைத்தியலிங்கபுரத்தை சேரந்த பிரதாப் (வயது 16) என்பவர் கலந்து கொண்டு விளையாடினார். போட்டியின் இடையே அவர் திடீரென மயக்கம் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் பிரதாப்பை மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





