கம்பராமாயணம் காலம் கடந்து நிலைத்து நிற்கிறது

மண், மொழி, கலாசாரத்தை வெளிப்படுத்தும் கம்பராமாயணம் காலம் கடந்து நிலைத்து நிற்கிறது என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மகாதேவன் கூறினார்.
கம்பராமாயணம் காலம் கடந்து நிலைத்து நிற்கிறது
Published on

மண், மொழி, கலாசாரத்தை வெளிப்படுத்தும் கம்பராமாயணம் காலம் கடந்து நிலைத்து நிற்கிறது என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மகாதேவன் கூறினார்.

கம்பன் கழக பொன் விழா

கோவை கம்பன் கழகத்தின் 50-ம் ஆண்டு பொன் விழாவை யொட்டி 2 நாள் நிகழ்ச்சிகள் மணி மேல்நிலைப்பள்ளி நானி கலையரங்கில் நேற்று தொடங்கியது. கம்பன் கழக தலைவர் எஸ்.பதி, பொருளாளர் ஆர்.ஆர்.பாலசுந்தரம் ஆகியோர் வரவேற்றனர்.

பொன் விழா சிறப்பு நூலை பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் வெளியிட மரபின் மைந்தன் முத்தையா பெற்றுக்கொண்டார். விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மகாதேவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

கம்பராமாயணம்

கம்பராமாயணம் தமிழ் மண்ணின் சிறப்பையும், அறத்தையும் எடுத்து கூறுவதில் நிகரில்லாத அளவுக்கு உள்ளது. காலத்தை கடந்து நிலைத்து நிற்பவற்றில் திருக்குறளுக்கு அடுத்ததாக கம்பராமாயணம் விளங்குகிறது.

தமிழ்மொழி தான் ஞானத்தை அளிக்கும் உலகின் சிறந்த மொழி யாக உள்ளது. அறச்சிந்தனையுடன் கூடிய வடிவு மிக முக்கியமா னது. கம்பன் ஒரே படைப்பில் அனைத்தையும் கொண்டு வந்துள்ளார். அன்பையும், அறத்தையும் பின்னிப் பிணைந்து கம்பராமாயணம் இருப்பதாக கிருபானந்த வாரியார் கூறி உள்ளார்.

இதில் 6 காண்டங்களுடன் மொத்தம் 10,368 பாடல்கள் உள்ளன. மண், மொழி, கலாசாரம் அனைத்தையும் வெளிப்படுத்தும் வகையில் கம்பராமாயண பாடல்கள் உள்ளன. மானுடனத்தின் உன்னதத்தை பற்றி விளக்கும் உன்னத படைப்பாகும்.

இந்த உலகில் தேடிய செல்வம், ஈட்டும் பொருள், பதவி, அதி காரம் அனைத்தும் அழிந்துவிடும். அறச்செயல் தான் நன்மை அளிக்கும். காலத்தால் அழிக்க முடியாத படைப்பாக கம்பராமாயணம் விளங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com