காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் உண்டியல் வசூல்


காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் உண்டியல் வசூல்
x

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் உண்டியல் வசூல் 6 மாதங்களுக்கு பிறகு 3 உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தில் புகழ் பெற்ற ஆதி காமாட்சி ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 6 மாதங்களுக்கு பிறகு 3 உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. கோவில் செயல் அலுவலர் ஸ்ரீதர், அறநிலையத்துறை ஆய்வாளர் பிருத்திகா ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் பக்தர்கள் காணிக்கையாக 50 கிராம் தங்கம், 191 கிராம் வெள்ளி, ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 987 செலுத்தி இருந்தனர்.


Next Story