காரியாபட்டி, ஆவியூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


காரியாபட்டி, ஆவியூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

காரியாபட்டி, ஆவியூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் ெசய்யப்படுகிறது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காரியாபட்டி, ஆவியூர், புல்வாய்க்கரை ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

ஆதலால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கல்லுப்பட்டி, தொடுவன்பட்டி, புல்லூர், வினோபாநகர், தங்கப்பாண்டியன் நகர், பெருமாள்புதுப்பட்டி, வளையங்குளம், கல்லணை, காரியாபட்டி, பாண்டியன் நகர், பள்ளத்துப்பட்டி, அச்சம்பட்டி, சின்னகாரியாபட்டி, பஸ்நிலையம், செவல்பட்டி, சித்துமூன்றடைப்பு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

அதேபோல சத்திரபுளியங்குளம், மாங்குளம், பாம்பாட்டி, ஈ.பி.ஆபிஸ், அய்யனார் ஸ்பின்னிங் மில், கம்பிக்குடி, பாப்பணம், எழில் நகர், வெள்ளாகுளம், சுந்தரங்குண்டு, வேப்பங்குளம், மருதங்குடி, மொச்சிகுளம், வி.நாங்கூர், பிள்ளையார்குளம் ஆகிய பகுதிகளிலும் நாளை மின்வினியோகம் இருக்காது.

தச்சனேந்தல், புல்வாய்க்கரை, ஆவாரங்குளம், அ.முக்குளம், அழகாபுரி, எழுவணி, குண்டுகுளம், தொட்டியங்குளம், திம்மாபுரம், டி.வேப்பங்குளம், பாரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story