கார் மோதி கர்நாடக மாநில வாலிபர் பலி


கார் மோதி கர்நாடக மாநில வாலிபர் பலி
x

பவானிசாகர் அருேக ரோட்டை கடக்க முயன்றபோது கார் மோதி கர்நாடக மாநில வாலிபர் பலியானார். இந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர்.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அருேக ரோட்டை கடக்க முயன்றபோது கார் மோதி கர்நாடக மாநில வாலிபர் பலியானார். இந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர்.

ரோட்டை கடக்க...

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்துராஜ் (வயது 35). இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே மாராயிபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் வந்து உள்ளார். பவானிசாகரை அடுத்த ராஜன் அருகே வந்தபோது இயற்கை உபாதையை கழிக்க காரை விட்டு இறங்கி உள்ளார். அவருடன் காரில் வந்த வினோத்குமார், ரவிக்குமார் என்பவரும் இறங்கினர். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் காரில் ஏறுவதற்காக 3 பேரும் அங்குள்ள ரோட்டை கடக்க முயன்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று 3 பேர் மீது மோதிவிட்டு நிற்காமல் தாறுமாறாக சென்று எதிரே பவானிசாகரில் இருந்து பண்ணாரி நோக்கி வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

சாவு

இந்த விபத்தில் சித்துராஜ் படுகாயம் அடைந்தார். மேலும் இந்த விபத்தில் சித்துராஜுடன் வந்த வினோத்குமார், ரவிக்குமார் ஆகியோரும், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகப்புதூர் பகுதியை சேர்ந்த சந்திரன் (38), அதே காரில் வந்த ஜெகநாதன், ராஜேஷ் என்கிற சந்திரதீப் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த 6 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திாிக்கு கொண்டு சென்றனர். இதில் சித்துராஜ் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் 2 பேர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story