திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது


x
தினத்தந்தி 6 Dec 2022 9:43 AM GMT (Updated: 6 Dec 2022 1:36 PM GMT)

கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் கடல் போல் காட்சியளிக்கிறது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசேலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் மகாதீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் மூலம் திருவண்ணாமலைக்கு வந்து குவிந்து வருகின்றனர். அவர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர். இதுவரை 8 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்துள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை நகரில் எங்கு பார்த்தாலும் கடல் போல் பக்தர்களாகவே காட்சியளிக்கின்றனர்.





திருவண்ணாமலை நகரில் அனைத்து பகுதிகளிலும் போலீசார் பேரிகார்டுகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிரிவலப்பாதையிலும் தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.




தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரம் மற்றும் கோவிலை சுற்றி வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் 4 டி.ஐ.ஜி., 27 போலீஸ் சூப்பிரண்டுகள் என 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நேற்று முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் திருவண்ணாமலை நகரமே போலீசாரின் முழு கட்டுபாட்டிற்குள் வந்துள்ளது.





Next Story