அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 22 May 2023 7:20 AM GMT (Updated: 22 May 2023 8:22 AM GMT)

கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அவரது பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஜூன் 3 தொடங்கி, 2024 ஆம் ஆண்டு ஜூன் 3 வரை நடைபெறுகிறது. இதையொட்டி ஜூன் 3-ந்தேதி வடசென்னையில் தோழமை கட்சியினர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

5-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு கிண்டி கிங் ஆஸ்பத்திரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்தர மருத்துவமனையை திறந்து வைக்கிறார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்கிறார்.

இது தொடர்பாக முதள்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளார். இதையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அந்த ஆலோசனைக்கு பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் கருணாநிதி நூற்றாணடு விழாவை நடத்த வேண்டும் என்றார்.



Next Story