கருணாநிதி நினைவு தினம்; கோபாலபுரம் இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை


கருணாநிதி நினைவு தினம்; கோபாலபுரம் இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
x
தினத்தந்தி 7 Aug 2023 7:40 AM GMT (Updated: 7 Aug 2023 7:46 AM GMT)

முன்னதாக கருணாநிதி நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலையில் திமுகவினர் அமைதி பேரணி நடத்தினர். இதில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேரணி நிறைவில் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

பின்னர் சென்னை சி.ஐ.டி. காலனி இல்லத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு கோபாலபுரம் இல்லத்திற்கும் சென்று, கருணாநிதிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


Next Story