கவண்டம்பட்டி பகவதி அம்மன் கோவில் திருவிழா


கவண்டம்பட்டி பகவதி அம்மன் கோவில் திருவிழா
x

கவண்டம்பட்டி பகவதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.

கரூர்

நச்சலூர்,

கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே நெய்தலூர் ஊராட்சி கவண்டம்பட்டியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறு வழக்கம். அதேபோல் இந்தாண்டும் திருவிழா நடத்துவதற்கு ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் முடிவு செய்யப்பட்டது இதையடுத்து திரளான பக்தர்கள் முக்கொம்பு காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் மற்றும் பால்குடம் எடுத்து கொண்டு மேளதாளத்துடன் பகவதி அம்மன் கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.இதையடுத்து அம்மனுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து இரவு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story