கெங்கையம்மன் சிரசு திருவிழா


கெங்கையம்மன் சிரசு திருவிழா
x

காவேரிப்பாக்கத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம் பேரூராட்சி, கொண்டாபுரம் பகுதி, கண்ணாங்குளக்கரையில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் சிரசு திருவிழா நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு மதியம் அம்மனுக்கு பொங்கல் வைத்து படைத்தனர். மாலையில் பக்தர்கள் அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற்றினர். இரவு அம்மன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story