கெங்கை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா


கெங்கை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே கெங்கை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே கீழ்ப்பட்டு கிராமத்தில் உள்ள கெங்கை மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா கடந்த 22-ந் தேதி காப்புகட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் ஊரணி பொங்கல் வைத்தல், பால்குடம் எடுத்தல், கூழ்வார்த்தல், ஆரியமாலா, காத்தவராயன் திருக்கல்யாணம், கழுமரம் ஏறுதல், அலகு போடுதல், காளிகோட்டை இடித்தல், தீமிதித்தல், அம்மன் வீதிஉலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு கெங்கை மாரியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் கெங்கை மாரியயம்மன் எழுந்தருள தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அங்கே திரண்டு நின்ற பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது. இதில் கீழ்ப்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தா்கள் திரளாககலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story