மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில் கடத்திய 2 வாலிபர்கள் சிக்கினர்


மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில் கடத்திய 2 வாலிபர்கள் சிக்கினர்
x
தினத்தந்தி 21 Sep 2023 6:45 PM GMT (Updated: 28 Sep 2023 11:58 AM GMT)

மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில் கடத்திய 2 வாலிபர்கள் சிக்கினர்

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குரூஸ்மைக்கேல் மற்றும் போலீசார் நேற்று காந்திநகர் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது படுக்கப்பத்து பகுதியில் இருந்து தட்டார்மடம் நோக்கி 2 பேர் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை தடுத்து போலீசார் சோதனை நடத்தினர். அதில் ஒரு சாக்குப்பையில் 80 மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக கடத்தி சென்றது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் குலசேகரன்பட்டினம் கந்தசாமி மகன் சுடலைமணி (வயது 25), திசையன்விளை உறுமன்குளம் சுப்பையா மகன் பொன்சுடலை (25) என தெரியவந்தது. இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2பேரையும் கைது ெசய்தனர். மதுபாட்டில்களை கடத்துவதற்கு அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் ெசய்யப்பட்டது.


Next Story