மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி
வாணாபுரம்
பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் போலீசார் அத்தியூர் சந்தைமேடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை சோதனை செய்தபோது அட்டைப்பெட்டியில் மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் மூர்த்தி(வயது 47) என்பதும், விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து மூர்த்தியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 100 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story