இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொந்தரவு; வாலிபருக்கு 13 ஆண்டு சிறை; போக்சோ கோர்ட்டு தீர்ப்பு


இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொந்தரவு; வாலிபருக்கு 13 ஆண்டு சிறை;  போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
x

இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த வாலிபருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.

திருநெல்வேலி

இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த வாலிபருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பாலியல் தொந்தரவு

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ராஜபாண்டி ஊரைச் சேர்ந்த பால்ராஜ் மகன் சமுத்திர பாண்டி (வயது 28). இவர் ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு 17 வயதில் இருந்த அந்த பெண்ணை சமுத்திரபாண்டி கடத்தி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சமுத்திர பாண்டியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.

13 ஆண்டு சிறை

வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி அன்பு செல்வி விசாரித்து சமுத்திர பாண்டிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் உஷா ஆஜரானார்.

1 More update

Next Story