ஓய்வு பெற்ற அரசு ஊழியர்,மோட்டார்சைக்கிள் விபத்தில் பலி

ஓய்வு பெற்ற அரசு ஊழியர், மோட்டார்சைக்கிள் விபத்தில் இறந்தார்.
பாளையங்கோட்டை ரகுமத் நகரை சேர்ந்தவர் நம்பி (வயது 74). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். சம்பவத்தன்று இவர் வி.எம். சத்திரம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிரே வந்த சுரண்டையைச் சேர்ந்த பொக்லைன் டிரைவர் திரவியம் என்பவர் மோட்டார் சைக்கிளும், இவரது மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.
இதில் காயம் அடைந்த 2 பேரும் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நம்பி இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





