கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு - உண்மை கண்டறியும் சோதனைக்கு மேலும் 4 பேர் சம்மதம்


கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு - உண்மை கண்டறியும் சோதனைக்கு மேலும் 4 பேர் சம்மதம்
x

உண்மை கண்டறியும் சோதனைக்காக 12 பேரையும் முழு உடல் பரிசோதனை செய்த பின் வரும் 21-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

திருச்சி,

கே.என்.ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் 13 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த சோதனைக்கு ஏற்கனவே 8 பேர் சம்மதம் தெரிவித்திருந்தனர்.

ஆனால் இதில் ஆஜராகாத 4 பேரையும் கோர்ட்டில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து திருச்சி கோர்ட்டில் ஆஜராக மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகிய 4 பேரும் வந்தனர். அப்போது 4 பேரு உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டதாக கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் உண்மை கண்டறியும் சோதனைக்காக 12 பேரையும் முழு உடல் பரிசோதனை செய்த பின் வரும் 21-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே 13 பேரில் ஒருவர் மட்டும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story