கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை


கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 21 Oct 2022 6:45 PM GMT (Updated: 21 Oct 2022 6:46 PM GMT)

பூதப்பாண்டி அருகே கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்,

பூதப்பாண்டி அருகே உள்ள அழகியபாண்டியபுரம் எட்டாமடை குருசடி காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது47), கொத்தனார். இவருக்கு மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இந்தநிலையில் செல்வராஜ் கடந்த சில மாதங்களாக வேலை இல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story