மொபட் மோதி கொத்தனார் சாவு


மொபட் மோதி கொத்தனார் சாவு
x
சேலம்

பனமரத்துப்பட்டி:-

மல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மொபட் மோதி கொத்தனார் பரிதாபமாக இறந்தார். அவருடைய 6 வயது மகன் படுகாயம் அடைந்தான்.

கொத்தனார்

பனமரத்துப்பட்டி பேரூராட்சி ஒண்டிக்கடை கோம்பைகாடு பகுதியை சேர்ந்த காசி மகன் கோபி (வயது 25). கொத்தனார். இவர் நேற்று காலை தனது 6 வயது மகன் கவியரசனை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சேலம் சீலநாயக்கன்பட்டிக்கு சென்று விட்டு திரும்ப வீட்டுக்குவந்துள்ளார்.

பனமரத்துப்பட்டி பிரிவு ரோடு அருகே வந்த போது எதிரே வந்த மொபட் கோபி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கோபி, அவருடைய மகன் கவியரசன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

பலி

இதில் பலத்த காயம் அடைந்த கோபி சம்பவ இடத்திலேயே பலியானார். சிறுவன் கவியரசன் படுகாயம் அடைந்தான். அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த மல்லூர் போலீசார், கோபி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கோபியின் உடலை பார்த்து மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்கசெய்தது.

1 More update

Next Story