மோசமான தார்சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
குடிமங்கலம் மோசமான தார்சாலையால் வாகன ஓட்டிகள் அவதிபடுகின்றனர்.
திருப்பூர்
குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்டது விருகல் பட்டி ஊராட்சி. விருகல்பட்டி ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். விருகல்பட்டியிலிருந்து வல்லாகுண்டாபுரம் வரை செல்லும் கிராம இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இரவு நேரங்களில் சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே குண்டும் குழியுமான தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story