குரூப்-1 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு


குரூப்-1 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு
x

குரூப்-1 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கரூர்

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் 2 ஆண்டுகளாக பயின்று கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலங்கரை விளக்கம் திட்டத்தின் மூலம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளில் கலந்து கொண்ட மாணவர்களில் அருண்குமார், செந்தில்ராஜன், ராஜராஜேஸ்வர் ஆகியோர் டி.என்.பி.எஸ்.சி. குரூப் -1 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நினைவு பரிசாக நூல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது சமூக நலத்திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story