குலசை தசரா திருவிழா: முத்தாரம்மன் இன்று காமதேனு வாகனத்தில் பவனி


குலசை தசரா திருவிழா: முத்தாரம்மன் இன்று காமதேனு வாகனத்தில் பவனி
x

குலசேகரன்பட்டினத்தில் இன்று 5-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

உடன்குடி,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருகோவில் தசரா பெருந்திருவிழாவில் 5-ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் காமதேனுவாகனத்தில் நவநீதகிஷ்ணர் திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். நேற்று மாலை 5 மணிக்கு நடந்த சமய சொற்பொழிவில் அ.வீரபாகு வல்லவராயர், மற்றும் பாரத திருமுகன் திருச்சபை ச் சேர்ந்த ஏ'வி,பி, மோகனசுந்தரம் ஆகியோர்கள் சமய சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தினர்.

இன்று முன்னதாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.தொடர்ந்து விரதம் இருந்து வந்த பக்தர்கள் அதிகாலையில் கடலில் நீராடி, கோவிலுக்கு வந்து, மஞ்சல் கயிற்றினால் ஆன காப்பு வாங்கி, வலது கையில் கட்டி விரதத்தை தொடர்ந்து வருகின்றனர்.

கோவிலில் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி உதவிய ஆணையர் சங்கர் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்ட மருத்துவ துறை, போலீஸ் துறை, மின்சார துறை, போன்ற பல்வேறு அரசு துறை அதிகாரிகள் குலசேகரன்பட்டினம் நகரம் முழுவதும் வலம் வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story