குலசேகரன்பட்டினம்முத்தாரம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை


குலசேகரன்பட்டினம்முத்தாரம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 31 Aug 2023 6:45 PM GMT (Updated: 31 Aug 2023 6:46 PM GMT)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆவணிமாத பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, காலை 8 மணிக்கு காலசந்தி பூஜையும், நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் திருவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். பின்னர் மூலஸ்தானத்தில் தீபாரதனை நடைபெற்றது. இதில் குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பெண்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story