ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் பேரவை கூட்டம்


ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் பேரவை கூட்டம்
x
திருப்பூர்


வெள்ளகோவிலில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் பேரவை கூட்டம் தலைவர் ஆர்.தட்சிணாமூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், வாழ்வு சான்று சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் கே.ஆறுமுகம், பி.சதாசிவம், சி.விஸ்வநாதன், என்.கே.சுப்பிரமணியன், பி.சண்முகம் கால்நடை மருத்துவர் பி.குருசாமி மற்றும் வங்கி மேலாளர்கள் பி.கிஷோர், ஜி.செல்வம், தபால்துறை அலுவலர் முல்லைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story