காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி


காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
x

காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.

திருச்சி

ஜீயபுரம்:

முக்கொம்பு அருகே உள்ள திருப்பராய்த்துறை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அருள்முருகன்(வயது 40). இவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சுங்கச்சாவடி அருகே உள்ள காவிரி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றவர்கள் இதனை பார்த்து உடனடியாக ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருள்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story