மதுராந்தகம் அருகே லாரி மோதி தொழிலாளி பலி - உறவினர்கள் சாலை மறியல்


மதுராந்தகம் அருகே லாரி மோதி தொழிலாளி பலி - உறவினர்கள் சாலை மறியல்
x

மதுராந்தகம் அருகே லாரி மோதி தொழிலாளி பலியானார். இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தம் அடுத்த கிரல்வாடியை சேர்ந்தவர் முருகன் (வயது 54 ). கூலித்தொழிலாளி. இவர் நேற்று ஜமீன் எண்டத்தூர் உள்ள பெட்டி கடைக்கு சென்று திரும்பும்போது கிரல்வாடி செல்லும் வழியில் பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சித்தாமூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தர்மலிங்கம் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். லாரி டிரைவரை பிடித்து விசாரித்து வருகிறார்.

இதனையடுத்து அவரது உறவினர்கள் மதுராந்தகம்- கூவத்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சித்தாமூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.


Next Story