மாட்டு வண்டி மோதி பெண் பலி


மாட்டு வண்டி மோதி பெண் பலி
x

மாட்டு வண்டி மோதி பெண் பலியானார்.

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். விவசாயி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது36). இவர் நேற்று காலை குழுவில் பெற்ற கடனை திருப்பிக் கொடுப்பதற்காக ஆவணம் நெடுவாசல் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மாட்டு வண்டியின் டயர்கள் ராஜேஸ்வரி மீது ஏறியது. இதையடுத்து அவரை உறவினர்கள் உடனடியாக பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டயர் மாட்டு வண்டி உரிமையாளர் ஆறுமுகம் (35) என்பவரை கைது செய்தனர்.


Next Story