விநாயகர் சிலை ஊர்வலத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த கூடாது


விநாயகர் சிலை ஊர்வலத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த கூடாது
x

விநாயகர் சிலை ஊர்வலத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த கூடாது என ஆலோசனை கூட்டத்தில் போலீசார் அறிவுறுத்தினர்.

கரூர்

ஆலோசனை கூட்டம்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு கட்டுப்பாட்டில் உள்ள க.பரமத்தி, தென்னிலை, வேலாயுதம்பாளையம் ஆகிய ேபாலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வருகிற 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுமார் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் சார்பாக விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட உள்ளனர். தொடர்ந்து வருகிற 2-ந்தேதி அனைத்து சிலைகளும் ஊர்வலமாக கொண்டு வந்து புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் விநாயகர் சிலையை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் அன்று இரவு கரைக்க உள்ளனர்.இந்நிலையில் க.பரமத்தி, தென்னிலை, வேலாயுதம் பாளையம் போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்தல் மற்றும் விநாயகர் சிலை ஊர்வலமாக சென்று காவேரி ஆற்றில் கரைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.

கலந்தாய்வு

கூட்டத்திற்கு அரவக்குறிச்சி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன் தலைமை வகித்தார். வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், க. பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் ஆகியவற்றின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பற்றி கலந்தாய்வுக் கூட்டத்தின் போது காவல்துறையினர் தெரிவித்தனர்.

பிரச்சினை கூடாது

மேலும் சிலை வைக்கும் போதும், விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் போதும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த கூடாது. தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டு நெறிமுறை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது போலீசார் வழங்கி உள்ள அறிவுறுத்தல் படி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்பட வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.இதில், வேலாயுதம்பாளையம் ேபாலீசார், இந்து முன்னணியினர், பொதுமக்கள் கலந்து கொண்டு மேற்படி வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்றுக்கொண்டு செயல்படுவதாக கூறி கையொப்பமிட்டனர்.


Next Story