சாத்தான்குளத்தில்வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு


சாத்தான்குளத்தில்வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
x
தினத்தந்தி 21 July 2023 6:45 PM GMT (Updated: 21 July 2023 6:46 PM GMT)

சாத்தான்குளத்தில்வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

மாவட்டம் வள்ளியூரில் ஜோசப் என்ற வக்கீலை வெட்டி கொலை செய்ய முயன்றதை கண்டித்து நேற்று சாத்தான்குளம் கோர்ட்டில் வக்கீல்கள் ஒரு நாள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு வக்கீல் சங்க தலைவர் ஜெகன் ஆண்டனி டென்னிசன் தலைமை தாங்கினார். இதில் வக்கீல்கள் சிவபாலன், குமரேசன், முத்துராஜ், பிரேம்குமார், மணிகண்டன், கார்த்தி, சன் சுரேஷ், ராஜேஸ்வரி உட்பட 61 வக்கீல்கள் ஒட்டுமொத்தமாக இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் சாத்தான்குளம் ஒருங்கிணைந்த கோர்ட்டில் பணிகள் பாதிக்கப்பட்டன.


Next Story