கச்சத்தீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை-மத்திய இணை மந்திரி முரளிதரன் பேட்டி


கச்சத்தீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை-மத்திய இணை மந்திரி முரளிதரன் பேட்டி
x

கச்சத்தீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய இணை மந்திரி முரளிதரன் கூறினார்.

திருச்சி

செம்பட்டு,ஆக.21-

மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளிதரன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கச்சத்தீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றி நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

விநாயக் தாமோதர் சாவர்க்கர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடவில்லை என தி.மு.க. மட்டுமே அவ்வாறு சொல்லி வருகிறது. எந்த கட்சி சொன்னாலும், அவரது வரலாற்றை படித்தால் அவரை பற்றி தெரிந்து கொள்ளலாம். தி.மு.க.வின் ஊழல்கள் மற்றும் குடும்ப ஆட்சியை தொடர்ந்து பா.ஜனதா எதிர்த்தும், சுட்டிக்காட்டியும் வருகிறது. இதன் காரணமாக தமிழக மக்களின் ஆதரவு பா.ஜனதாவிற்கு அதிகரித்து வருகிறது. தேசிய பாதுகாப்பிற்காக சீன உளவு கப்பலை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story