பொன்னி நதி பூமியை பொன் விளையும் பூமியாக மாற்றுவோம் - அன்புமணி ராமதாஸ்


பொன்னி நதி பூமியை பொன் விளையும் பூமியாக மாற்றுவோம் - அன்புமணி ராமதாஸ்
x

பொன்னி நதி பூமியை பொன் விளையும் பூமியாக மாற்றுவோம் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

தமிழகத்தின் மிகச்சிறிய மாவட்டங்களில் ஒன்றான அரியலூரில் மொத்தம் 632 ஏரிகள் உள்ளன. கடலுடன் ஒப்பிடக்கூடிய கொள்ளிடம் என்ற மிகப்பெரிய ஆறும், மருதையாறும் அரியலூர் மாவட்டத்தில் தான் பாய்கின்றன. ஆனாலும் அரியலூர் மாவட்டம் இன்னும் வறண்ட பூமியாகத் தான் உள்ளது.

அங்கு மிகக்குறைந்த அளவில் தான் பாசன வசதி பெற்ற நிலங்கள் உள்ளன. கி.பி. 9-ம் நூற்றாண்டில் தொடங்கி 11-ம் நூற்றாண்டு வரை அரியலூர் மாவட்டத்தில் சோழ மன்னர்கள் ஏற்படுத்திய பாசனக் கட்டமைப்புகள் வியக்க வைக்கக்கூடியவை. சோழர் கால பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுப்பதன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை தொழில் வெகு சிறப்பாக வளரும்.

அதனால்தான், அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 29 மற்றும் 30-ம் தேதிகளில் அரியலூர் மாவட்டத்தில் எழுச்சி நடைபயணம் மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடைபயணம் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில், பொன்னி நதி பூமியை பொன் விளையும் பூமியாக மாற்றுவோம். சோழர் கால பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுப்போம். அதற்காக அரியலூர்-சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்தச் செய்வதற்கான நமது முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story