நூலகர் தின விழா


நூலகர் தின விழா
x
தினத்தந்தி 17 Aug 2023 6:45 PM GMT (Updated: 17 Aug 2023 6:46 PM GMT)

நூலகர் தின விழா மாவட்ட மைய நூலகத்தில் நடந்தது.

சிவகங்கை


சிவகங்கை கவியோகி சித்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகம் சார்பில் நூலகர் தின விழா, மாவட்ட மைய நூலகத்தில் நடந்தது. மாவட்ட நூலக அலுவலர் சான் சாமுவேல் தலைமை தாங்கினார். நூலக ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் பகீரத நாச்சியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் ஈஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார். புத்தகம் வாசிப்பின் அவசியம் குறித்து கேப்டன் ஆர்.வி. சரவணன், ரமணவிகாஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் முத்து கண்ணன் சுகன்யா, நூல் சரிபார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன், நூலகர்கள் முத்துக்குமார், சாந்தி, தமிழ், ஆசிரியர் இளங்கோ ஆகியோர் பேசினா். "உயிரின் தானம்" என்ற நூலை ஆசிரியர் செல்வகுமார் அறிமுகம் செய்து பேசினார். நூலகத்தில் உறுப்பினராக இணைந்த ஏராளமான அரசு பள்ளி மாணவ- மாணவியருக்கு நூலகத்தின் சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் நூலகர் கனகராஜ் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story