எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்


எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
x

குடியாத்தத்தில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

குடியாத்தம் எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு முகவர் சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு குடியாத்தம் கிளை சங்க தலைவர் எம்.சுப்பிரமணி தலைமை தாங்கினார். செயலாளர் எம். குலசேகரன், பொருளாளர் ஆர்.சீனிவாசன், நிர்வாகிகள் சி.கண்ணன், என். விஜயகுமார், மல்லிகா, கவிதா, மாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாலிசிதாரர்கள் சார்பில் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்கறிஞர் கே.எம்.பூபதி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பேசினர். கோட்ட பொதுச் செயலாளர் ஜே.கே.என்.பழனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதில் கலந்து கொண்டவர்கள் பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும், வட்டி வகித்ததை குறைக்க வேண்டும், ஐந்து வருடங்களுக்கு மேற்பட்ட பாலிசிகளை புதுப்பிக்க வேண்டும், பாலிசி மீதான ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும், முகவர்களுக்கான பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும், முகவர்களுக்கு மருத்துவக் குழு காப்பீடு வழங்க வேண்டும், குழுக்காப்பீடு வயதுவரம்பு உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


Next Story