ஆயுள் தண்டனை கைதி சாவு


ஆயுள் தண்டனை கைதி சாவு
x

நெல்லையில் ஆயுள் தண்டனை கைதி இறந்தார்.

திருநெல்வேலி

ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் நடுத்தெருவை சேர்ந்தவர் விரால் கந்தன் (வயது 67). இவர் கடந்த 2009-ம் ஆண்டு கொலை வழக்கில் ஸ்ரீவைகுண்டம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்த போது, விரால் கந்தனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று காலையில் உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story